• Fri. Nov 28th, 2025

கொழும்புக்கு அழைக்கப்பட்ட தே.ம.சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள்

Byadmin

Nov 20, 2024

தேசிய மக்கள் சக்தியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், பெலவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைச் சேர்ந்த 141 வேட்பாளர்களும், தேசிய பட்டியலிலிருந்து 18 பேரும் பாராளுமன்றுக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

கட்சித் தலைமையகத்தில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டு, பின்னர் பாராளுமன்ற வளாகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றிய புரிதலை அவர்களுக்கு வழங்குவதற்காகவே அவர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *