• Sun. Oct 12th, 2025

கணித ஆசிரியர் கைது

Byadmin

Mar 8, 2025

கணித ஆசிரியர் ஒருவர், பத்தாம் வகுப்பில் படிக்கும் எட்டு மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் திம்புலாகல கல்வி வலயத்தில் இடம்பெற்றுள்ளது.

பெற்றோர்கள் பலமுறை பொலிஸ் நிலையத்தில் அளித்த புகார்களைத் தொடர்ந்து கணித ஆசிரியர் கைது செய்யப்பட்டதாகவும், பாடசாலையில் பத்தாம் வகுப்பு படிக்கும் எட்டு மாணவிகள் ஆசிரியரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட கணித ஆசிரியரை பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *