• Tue. Apr 7th, 2026

இலங்கை கிரிக்கெட் வீரருக்கு பிணை

Byadmin

Mar 9, 2025

பிலியந்தலை, கொலமுன்னவில் உள்ள ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஒருவரைத் தாக்க முயன்றதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார கைது செய்யப்பட்டார்.

பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, அடுத்த புதன்கிழமை (12) கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டார்.

முறைப்பாட்டாளரும் அண்டைய வீட்டார் என்றும், இலங்கை கிரிக்கெட் வீரர் அஷேன் பண்டார தனது காரை வீதியைத் தடுக்கும் வகையில் நிறுத்திய பின்னர் தகராறு ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *