• Sun. Oct 12th, 2025

குயில்வத்தையில் குத்துக்கரணம் அடித்த கார்

Byadmin

Mar 16, 2025

அதிகவேகமாக பயணித்த காரொன்று, வீதியை விட்டு விலகி, 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவம், சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளது.

கண்டியில் இருந்து ஹட்டன் வரைக்கும் இந்த கார் பயணித்துள்ளது. ஹட்டன் குயில்வத்தை பகுதியிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

அனர்த்தம் ஏற்பட்ட போது, காரில் சாரதி மட்டுமே இருந்துள்ளார். அவருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை. எனினும், அந்த கார் பலத்த சேதமடைந்துள்ளது.

திடீரென ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *