இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலை அதிகரிப்பால், ஏப்ரல் 1 முதல் ஒரு கப் பால் தேநீர் விலை ரூ.10 உயரும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் (AICROA) தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால் மா விலை 4.7 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக AICROA தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்தார்.
இதன் விளைவாக, ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள் 400 கிராம் பால் மா பாக்கெட்டின் சில்லறை விலை அண்ணளவாக 50 ரூபாவால் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.