• Sat. Oct 11th, 2025

தென்கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Byadmin

Apr 2, 2025

தென்கொரியாவிலுள்ள இலங்கையர்களுக்கு அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, தென்கொரியாவின் சியோல் நகரில் அமைதியின்மை ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதன் காரணமாக இரு தினங்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (04) மற்றும் சனிக்கிழமைகளில் (05) அங்குள்ள இலங்கை தூதரகம் திறக்கப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவசர தேவைகள் தவிர்ந்து ஏனைய சந்தர்ப்பங்களில் சியோல் நகருக்குள் பிரவேசிப்பதனை தவிர்க்குமாறு அந்த நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அவசர நிலைமை ஏற்படுமாயின் 02 735 2966, 02 735 2967, 02 794 2968 அல்லது 070 4009 2992 ஆகிய இலக்கங்கள் ஊடாக தென் கொரியாவிலுள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *