• Sat. Oct 11th, 2025

மர்மப் பொதியால் ரஷ்ய தூதரகத்தில் பரபரப்பு

Byadmin

Apr 28, 2025

ஒரு வெளிநாட்டு பிரஜை விட்டுச் சென்ற ஒரு பொதி தொடர்பாக கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு வெடிகுண்டு செயலிழப்புப் படை இன்று அழைக்கப்பட்டது.

ஒரு வெளிநாட்டவர் மடிக்கணினி அடங்கிய பார்சலைக் கொடுத்துவிட்டு உடனடியாக தூதரக வளாகத்தை விட்டு வெளியேறியுள்ளார். அந்தப் பொதி குறித்து சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, தூதரக ஊழியர்கள் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்த பொதி குறித்து விசாரிக்க, கறுவாத்தோட்டம் பொலிஸார், சிறப்பு அதிரடிப்படை (STF) மற்றும் வெடிகுண்டு செயலிழப்புப் படை அதிகாரிகள், ஒரு பொலிஸ் K9 உடன் தூதரகத்திற்கு வந்திருந்தனர்.

முதற்கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மடிக்கணினி மேலதிக விசாரணைக்காக கறுவாத்தோட்ட பொலிஸாரிடம் எடுத்துச் செல்லப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *