• Sat. Oct 11th, 2025

க்ளோரின் கசிவால் நால்வர் மருத்துவமனையில்

Byadmin

Apr 30, 2025

பசறை நகரில் நீர் சுத்திகரிப்புக்காக பயன்படுத்தப்படும் க்ளோரின் சிலிண்டரில் ஏற்பட்ட திடீர் கசிவைத் தொடர்ந்து நான்கு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட , 14 நோயாளிகள் தற்காலிகமாக ஹாப்டன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மருத்துவமனைக்கு அருகே உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்த 76 வயதுடைய பெண் ஒருவர் குளோரின் சிலிண்டர் கசிவு காரணமாக சுவாசிப்பதில் சிரமமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் மேலும் 43 வயதுடைய ஆண், 73 வயதுடைய பெண் மற்றும் 26 வயதுடைய பெண் ஆகியோர் பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பசறை பிரதேச சபைக்குட்பட்ட பசறை நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பயன்படுத்தப்படும் க்ளோரின் சிலிண்டரில் திடீரென கசிவு ஏற்பட்டதால், அவர்ளுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

மேலும் பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நோயாளியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *