• Sun. Oct 12th, 2025

உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும்

Byadmin

May 23, 2025

நிலவும் மோசமான வானிலை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இலங்கைக்கு வருவதில் மேலும் சில நாட்கள் தாமதம் ஏற்படக்கூடும் என்று தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு கப்பல் நேற்று (மே 21) இரவு இலங்கையை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்தது.

தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 250 மெட்ரிக் தொன் உப்பு மற்றும் தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட 2,800 மெட்ரிக் தொன் உப்பு உட்பட 3,050 மெட்ரிக் தொன் உப்பு கையிருப்பு நாட்டிற்கு வரவிருந்தது. 

இருப்பினும், பாதகமான வானிலை காரணமாக உப்பு இருப்பு சில நாட்களுக்கு தாமதமாகலாம் என்று தேசிய உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் பிறகு உப்பு தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் என்று கூறிய நிறுவனம், இது சந்தையில் உப்பு பற்றாக்குறையைக் குறைக்கும் என்றும் கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *