மித்தெனிய – தொரகொலயா பகுதியில் இன்று (25) காலை சுட்டு கொலை செய்யப்பட்ட 2 இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தற்போது 3 விசேட விசாரணைக் குழுக்கள், மித்தெனிய பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.