• Sat. Oct 11th, 2025

மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

Byadmin

Jul 7, 2025

மன்னாரில் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகளை இன்று (7) அதிகாலை பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 

மன்னாரில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் பிராந்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு (DCDB) நடத்திய விசேட சோதனை நடவடிக்கையின் போது தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நடுக்குடா கடற்கரைக்கு அண்மித்த 30ஆவது காற்றாலை கோபுரத்திற்கு அருகே காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. 

இந்த கேரள கஞ்சா பொதிகள் இந்தியாவிலிருந்து கடல் வழியாக கொண்டு வரப்பட்டு மறைத்து வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *