பொல்பிதிகம, மொரகொல்லகம பகுதியில் (31) கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்ததாக பொல்பிதிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்பிட்டிய, மொரகொல்லகம பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் வீழ்ந்த தேங்காயை எடுக்கச் சிறுவன் சென்ற போதே கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் நடந்த நேரத்தில் சிறுவனின் தாயும் தந்தையும் வீட்டிலிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.