நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருகின்றேன் என்று முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“அரசியலுக்குள் வந்துவிட்டால் அதனைக் கைவிட முடியாது. நான் இன்னும் ஓய்வுபெறவில்லை. தற்போது நடப்பவற்றை அவதானித்து வருகின்றேன். எமக்கு மக்கள் ஆதரவு உள்ளதா என்பதை தேர்தலில் போட்டியிட்டே கண்டறிய முடியும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சமல் ராஜபக்ச போட்டியிடவில்லை. அவரது மகன் சஷீந்திர ராஜபக்ச தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.