மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை-மிரிகம பிரிவின் கட்டுமானப் பணிகள் புதன்கிழமை (17) அன்று காலை 10:00 மணிக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பிக்கப்பட்டது.
“மறுமலர்ச்சிக்கான நெடுஞ்சாலை” என்ற கருப்பொருளின் கீழ் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் முக்கியப் பகுதிகளுக்கு இடையிலான பொருளாதார இணைப்பை அதிகரிப்பதற்கும் இலக்காகக் கொண்ட இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.