• Wed. Jun 10th, 2026

ஒரு குழந்தை பெற்றால் 21 மில்லியன் ரூபா

Byadmin

Oct 16, 2025

தென் கொரியாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பதற்காக சில நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு 72,000 அமெரிக்க டொலர் (சுமார் 100 மில்லியன் கொரிய வோன்) மானியங்களை வழங்குவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சியோலை தளமாகக் கொண்ட பூ-யுங் நிறுவனம், அதன் ஊழியர் ஒவ்வொரு குழந்தை பெற்றெடுக்கும் போதும் நிபந்தனையின்றி சுமார் 72,000 அமெரிக்க டொலரை (இலங்கை மதிப்பில் சுமார் 21 மில்லியன் ரூபா) நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்துவதாக அறிவித்துள்ளது. இதற்கு அரசு வரி விலக்கு அளிக்கிறது.

தென் கொரியாவின் பிறப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு 0.75 வீதமாகக் குறைந்துள்ளது, இது உலகிலேயே மிகக் குறைந்த விகிதமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *