• Thu. Oct 16th, 2025

மழையால் தப்பித்த இங்கிலாந்து

Byadmin

Oct 16, 2025

பெண்களின் உலகக் கிண்ணத் தொடரில் கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் புதன்கிழமை (15) நடைபெற்ற பாகிஸ்தான், இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டியில் மழை காரணமாக முடிவேதும் பெறப்படவில்லை.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட இங்கிலாந்து, டியானா பைக், அணித்தலைவி பாத்திமா சனா (4), சாதியா இக்பால் (2), றமீன் ஷமிமிடம் விக்கெட்டுகளைப் பறிகொடுத்து மழையால் 31 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட இனிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களையே பெற்றது. சார்லி டீன் 33 ஓட்டங்களைப் பெற்றார்.

பதிலுக்கு டக்வேர்த் லூயிஸ் ஸ்டேர்ன் முறைப்படி 31 ஓவர்களில் 113 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான், 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்ட நிலையில் போட்டியில் முடிவேதும் கிடைக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *