பாணந்துறையில் கணவர் மருத்துவமனையில் இருந்தபோது, கையொப்பத்தை போலியாக தயாரித்து முச்சக்கர வண்டியை விற்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண், மொரோந்துடுவ, கோனதுவ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரது கணவர் மருத்துவமனையில், இருந்தபோது, வீட்டிலிருந்து முச்சக்கர வண்டியை யாரோ திருடிச் சென்றதாக முறைப்பாடு கிடைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசாரணையின் போது, பண்டாரகம பகுதியில் உள்ள ஒரு வீட்டில் முச்சக்கர வண்டி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையின் போது, முறைப்பாட்டாளரின் மனைவி போலி கையொப்பத்தை பயன்படுத்தி முச்சக்கர வண்டியை விற்றிருப்பது தெரியவந்தது.