• Mon. Apr 6th, 2026

கிரிக்கெட் வீரர் மைதானத்தில் மரணம்

Byadmin

Nov 10, 2025

மினுவங்கொடை, அலுத்தோபொல பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் 41 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆட்டத்தின் போது பந்தைப் பிடிக்க முயன்றபோது இரண்டு வீரர்கள் மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் பலத்த காயமடைந்து மினுவங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவர் உயிரிழந்தார்.

இறந்தவர் பலுகஹவெல, கட்டுவெல்லேகம பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து மினுவங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *