• Sat. Apr 4th, 2026

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள்

Byadmin

Dec 23, 2025

நாடு முழுவதும் உள்ள பாடசாலை  மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் தேசிய திட்டத்தை கல்வி அமைச்சு 2026 முதல் விரிவுபடுத்தும், இதன் மூலம் 6 ஆம் வகுப்புக்கு மேல் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான மாணவிகள் பயனடைவார்கள் என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கல்வி அமைச்சில் டிசம்பர் 22 ஆம் திகதி நடைபெற்ற பாடசாலை மாணவிகளின் சுகாதாரம் குறித்த கலந்துரையாடலின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது, இதில் பிரதி அமைச்சர் டாக்டர் மதுரா செனவிரத்னவும் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *