கற்றாழை என்ற வயகராவின் வியப்பூட்டும் ரகசியம்…!!
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற கண்டங்களை வெற்றி கொண்ட பிறகு, அடுத்த போருக்குத் தயாராகிக் கொண்டிருந்தார் மாவீரன் அலெக்ஸான்டர். தொடர்ந்து போர்க்களத்திலேயே வீரர்கள் இருந்ததால் என்ன செய்வது என்று குழப்பம் அலெக்ஸாண்டருக்கு வந்தது.உடனே தன்னுடைய குருவான அரிஸ்டாட்டிலிடம் ஆலோசனை கேட்டார்.அப்போதுதான் சோற்றுக் கற்றாழையைத் தொடர்ந்து 15 நாட்கள் காயங்களின்மீது தடவி வந்தால், புண்கள் ஆறும் என்று ஆலோசனை கூறினார் அரிஸ்டாட்டில். கற்றாழையைப் பயன்படுத்தி வீரர்களின் காயங்களை குணமாக்கிய பிறகு மீண்டும் பழைய உற்சாகத்தோடு போருக்கு வீரர்களை அழைத்துச் சென்று மேலும் பல வெற்றிகளைப் பெற்றார் அலெக்ஸாண்டர்.
யார் சாப்பிடக்கூடாது?
கற்றாழை குளிர்ச்சியானது என்பதால் ஆஸ்துமா, சளி, இருமல் போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் சோற்றுக் கற்றாழை சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
வீட்டில் வளர்க்கும் முறை
கற்றாழை ஒரு செடி வைத்தால் அதனருகே சிறிய சிறிய செடிகளாக வளரக்கூடியது. இதுபோன்ற ஒரு சிறிய செடியை அடிவேருடன் எடுத்து சின்ன சின்ன தொட்டிகளில் வைத்து வீடுகளில் எளிதாக வளர்க்கலாம். தோட்டங்கள் போன்ற மண் தரையில் ஒரு இடத்தில் ஒரு செடியை வைத்து நீரூற்றி வந்தால், பக்கத்திலேயே அடுத்தடுத்து சிறுசிறு செடிகளாக வளர்ந்து பல்கிப் பெருகக்கூடியது கற்றாழை.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!