• Sun. Oct 12th, 2025

பா.உறுப்பினர்களது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கவில்லை – ஆணைக்குழு மறுப்பு

Byadmin

Nov 21, 2017

பா.உறுப்பினர்களது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கவில்லை – ஆணைக்குழு மறுப்பு

பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டினை மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பில் விசாரிக்கும் ஆணைக்குழு மறுத்துள்ளது.

குறித்த தகவல்கள் யாவும், சட்ட ரீதியாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் ஊடாகவே பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர்களது சிறப்புரிமை மீறப்படுவதாகவும் அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று(20) பாராளுமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *