கோட்டாபயவை கைது செய்வதற்கான இடைக்கால தடை நீடிப்பு…
பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணை இன்று(06) மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்து கொண்ட போது எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இந்த இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது.