(உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 18ஆம் திகதி தபாலுக்கு)
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை எதிர்வரும் 18ஆம் திகதி தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.