• Sat. Oct 11th, 2025

தேர்தல் 10 ஆம் திகதி கட்டாயம் நடக்கும், வதந்திகளை நம்பாதீர்கள்- மஹிந்த தேசப்பிரிய

Byadmin

Jan 29, 2018

(தேர்தல் 10 ஆம் திகதி கட்டாயம் நடக்கும், வதந்திகளை நம்பாதீர்கள்- மஹிந்த தேசப்பிரிய)

எதிர்வரும் பெப்ருவரி 15 ஆம் திகதி வரையில் தேர்தலுக்கு தடையாக அமையும் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபட வேண்டாம் என சகல தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பவற்றிடம் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று(28) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல் ஒன்றை நடாத்துவதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை ஒழுங்காக முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் 10 ஆம் திகதி தேர்தல் கட்டாயம் இடம்பெறும் எனவும் இயற்கை அனர்த்தம் ஒன்று ஏற்படின் மாத்திரமே தேர்தலை ஒத்திப்போடுவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ள மஹிந்த தேசப்பிரிய, சமூக ஊடகங்களில் தேர்தல் பிற்போடப்படுவது தொடர்பில் வெளியாகும் எந்தவொரு செய்தியிலும் உண்மையில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *