• Fri. Nov 28th, 2025

பிரதேச சபை உறுப்பினராகப் பாடசாலை மாணவி தெரிவு

Byadmin

Mar 23, 2018

(பிரதேச சபை உறுப்பினராகப் பாடசாலை மாணவி தெரிவு)

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகளுக்கு அமையப் பாடசாலை மாணவி ஒருவர் பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாத்தாண்டிய குடாவேவ பிரதேசத்தைச் சேர்ந்த சந்தி சுபா தென்னகோன் என்ற மாணவியை இவ்வாறு பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தற்பொழுது 18 வயதாகும் சந்தி சுபா தென்னகோன், நாத்தாண்டிய தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையின், உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று வருகிறார்.

இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றவும் அவர் தற்பொழுது தயாராகி வருகிறார்.

இந்நிலையில் நாத்தாண்டிய பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி, மேலதிக பட்டியல் உறுப்பினராகச் செயற்பட சந்தி சுபா தென்னகோன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தனது முதலாவது வாக்கை, தனக்கே வழங்க அவருக்கு இந்தத் தேர்தலின் போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளமை சிறப்பம்சமாகும். (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *