• Sun. Oct 12th, 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை

Byadmin

Apr 3, 2018

(கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை)

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஊழியர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு சிறு பதற்ற நிலை தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தின் ஊழியர்கள் இன்று(03) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மூன்று வருடங்களுக்கு ஒரு தடவை வழங்கப்படுகின்ற சம்பள உயர்வை வழங்குமாறு கோரி விமான நிலைய ஊழியர்கள் இந்த பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விமான நிலைய ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே இன்று(03) முற்பகல் பேச்சுவார்த்தை நடைபெற்றிருந்தது.

குறித்த பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவுபெற்றதால், ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *