• Sun. Oct 12th, 2025

புத்துணர்ச்சி தரும் ஹெர்பல் சூப்

Byadmin

May 26, 2018

(புத்துணர்ச்சி தரும் ஹெர்பல் சூப்)

துளசி இலை – அரை கப்,
வெற்றிலை – 4,
கற்பூரவல்லி இலை – 2,
புதினா இலை – கால் கப்,
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
நெய் – ஒரு டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – ஒன்று,
பூண்டுப் பல் – 2,
உப்பு – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை :

வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

துளசி, வெற்றிலை, கற்பூரவல்லி, புதினா இலைகளை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

கடாயில் நெய் விட்டு பூண்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.

கழுவிய இலைகளை இதனுடன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

இதில் நீர் விட்டு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

பிறகு, அடுப்பை நிறுத்தி, இலைகளை தனியே எடுத்து மையாக அரைத்து, வேகவைத்த நீரில் மீண்டும் சேர்த்து, ஒரே ஒரு கொதிவிட்டு இறக்கி வடிகட்டவும்.

பரிமாறும்போது உப்பு, எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *