• Tue. Oct 14th, 2025

“கட்டார் நாட்­ட­வர்­களை வரவேற்கிறோம்” – சவூதி

Byadmin

Jun 7, 2018

(“கட்டார் நாட்­ட­வர்­களை வரவேற்கிறோம்” – சவூதி )

தற்­போது காணப்­படும் வளை­குடா முரண்­பா­டு­களைப் புறந்­தள்ளி ஹஜ் மற்றும் உம்ரா கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்கு
கட்டார் நாட்டு மக்­களை வர­வேற்­ப­தாக கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சவூதி அரே­பிய ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு அறித்­தது.

ஜித்­தா­வி­லுள்ள அப்துல் அஸீஸ் சர்­வ­தேச விமான நிலை­யத்­தினை வந்­த­டைந்து உம்ரா கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தற்­காக சட்­ட­ரீ­தி­யாக தம்மைப் பதிவு செய்து கொண்­டதன் பின்னர் கட்டார் நாட்­ட­வர்கள் உம்ரா கட­மை­யினை நிறை­வேற்ற முடியும்

கட்­டாரில் வதியும் வெளி­நாட்­ட­வர்கள் உம்ரா கட­மை­யினை நிறை­வேற்­று­வ­தாயின் அமைச்சின் இணை­யத்­த­ளத்தில் தமது தர­வு­க­ளைப் பதிவு செய்து, சேவைப் பொதி­க­ளுக்குத் தெரிவு செய்­யப்­ப­டு­வ­தற்­காக சவூ­தி­யினால் அதி­கா­ர­ம­ளிக்­கப்­பட்ட உம்ரா கம்­ப­னி­க­ளுடன் இலத்­தி­ர­னியல் உடன்­பாட்டுச் செயற்­பா­டு­களைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அமைச்சு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ரம­ழா­னின்­போது கட்டார் விமான சேவை தவிர்ந்த அனைத்து விமான சேவைகள் மூலமும் கட்டார் நாட்­ட­வர்­களும் அங்கு வதி­ப­வர்­களும் ஜித்­தா­வி­லுள்ள அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வரமுடியும் என அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
-Vidivelli-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *