(எதிர்வரும் 26 ஆம் திகதி பணிபுறக்கணிப்பில்)
கல்வி துறையில் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளானவர்களுக்காக தீர்வினை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கமைய, சட்டரீதியற்ற நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கல்வி நிர்வாக சேவை சங்கம் மற்றும் ஆசிரியர் – அதிபர் சங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து, எதிர்வரும் 26 ஆம் திகதி பணிபுறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
எனவே குறித்த தினத்தில் நடைபெறவுள்ள பாடசாலை மட்ட பரீட்சைகளை வேறொரு தினத்தில் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, கல்வி அமைச்சிடம், கல்வி பாதுகாப்பு தொழிற்சங்க ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.