• Sat. Apr 4th, 2026

தினமும் இந்தப் பானத்தை குடித்தால் கண்ணாடியை கழட்டி நீங்களே தூரப் போட்டுருவீங்க..!

Byadmin

Feb 15, 2026

(தினமும் இந்தப் பானத்தை குடித்தால் கண்ணாடியை கழட்டி நீங்களே தூரப் போட்டுருவீங்க..!)

கண்பார்வை குறைப்பாட்டால் கண்ணாடி உபயோகிப்பவரா நீங்கள்? உங்களின் இந்த நிலைமைக்கு பரம்பரைக் காரணிகள், போதிய ஊட்டச்சத்து இன்மை, வயது முதிர்தல், கண்களுக்கு அதிக பழுவைக் கொடுத்தல் என்பவை காரணமாக இருக்கலாம்.

எனினும், பின்வரும் மருந்தை நீங்கள் வீட்டிலேயே தயாரித்து உபயோகிப்பதன் மூலம் இனிமேல் கண்ணாடியை உபயோகிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

தேவையான பொருட்கள்
01. 300 கிராம் தேன்
02. 500 கிராம் அரைத்த வால்நட்ஸ்
03. 3 – 4 எலுமிச்சம் பழத்தின் சாறு
04. 100 கிராம் கற்றாளைச் சாறு

செய்முறை
கற்றாளைச் சாறை தயாரித்துக் கொள்ள முதலில் அதன் தோலை நன்கு சீவி அதனை கொதித்தாறிய நீரினால் கழுவ வேண்டும். பின்னர் அதனை சிறுசிறுதுண்டுகளாக வெட்டி நசுக்கி அதன் நாரை எடுக்க வேண்டும். கற்றாளையின் தோலை சீவுவதற்கு முன்னதாக 10 – 12 நாட்கள் அதனை குளிரூட்டியில் வைத்திருக்க வேண்டும் என்பதை மறவாதீர்கள்.

பின்னர், கற்றாளைச் சாற்றுடன் ஏனைய அனைத்து பொருட்களையும் கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை ஒரு மேசைக் கரண்டி வீதம் நாளொன்றுக்கு 03 தடவைகள் உட்கொள்ள வேண்டும். உணவு உட்கொள்வதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னதாக இதை உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

குறிப்பு:
கர்ப்பிணிகள், சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், இரைப்பை சம்பந்தப்பட்ட நோய்கள், டியூபகுளோசிஸ், பெண் இனப்பெருக்கத் தொகுதியில் அழற்சி மற்றும் இதய நோய்கள் உள்ளவர்கள் இதனை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *