(டொனால்ட் ட்ரம்ப்பின் விசேட இராப்போசன விருந்தில் ஜனாதிபதி பங்கேற்பு)
ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொண்டுள்ள அனைத்து அரச தலைவர்களுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட இராப்போசன விருந்துபசாரம் வழங்கியுள்ளார்.
இந்த இராப்போசனத்திற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் விசேட அழைப்பு விடுக்கப்பட்டது.
கூட்டதொடருடன் இணைந்ததாக நியூயோர்க் மாளிகையில் இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின்போது அமெரிக்க ஜனாதிபதி மற்றும் அவரது பாரியாரால் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களும் பாரியார் ஜயந்தி சிறிசேன அவர்களும் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.