• Sun. Oct 12th, 2025

பேரீச்சம்பழ ஊறுகாய் செய்வது எப்படி?

Byadmin

Sep 27, 2018

(பேரீச்சம்பழ ஊறுகாய் செய்வது எப்படி?)

தேவையான பொருட்கள் :

பேரீச்சம்பழம் – ஒரு கப்

மிளகாய்த்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன்
வினிகர் – 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு – 5 பல்
உப்பு – தேவையான அளவு

தாளிக்க :

கடுகு – ஒரு டீஸ்பூன்
வெந்தயத்தூள் – கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்

நல்லெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கிவிட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

நறுக்கிய பேரீச்சம் பழத்துடன் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும்.

வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் பூண்டு சேர்த்து வறுக்கவும்.

பிறகு, ஊறவைத்த பேரீச்சக் கலவையைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து மென்மையான கூழ் போல ஆகும்வரை வதக்கவும்.

நன்றாக கூழ் பதம் வந்தவுடன் இறுதியாக வினிகர் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஆறிய பிறகு சுத்தமான பாட்டிலில் சேகரித்து வைத்து பரிமாறவும்.

சூப்பரான பேரீச்சம்பழ ஊறுகாய் ரெடி.

இந்த ஊறுகாய் புளிப்பு, காரம், இனிப்பு சுவையுடன் அருமையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *