(இன்னும் ஒரு வருடம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி நீடித்திருந்தால் நாடு எஞ்சியிருக்காது)
இன்னும் ஒரு வருடம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி நீடித்திருந்தால் நாடு எஞ்சியிருக்காது என பிரதமர் என பாராளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அங்கு மேலும் கருத்து வெளியிட்ட பிரதமர்,
ஜனாதிபதியாக இருந்துள்ளேன் பிரதமராகவும் இருந்துள்ளேன் இந்த பிரதமர் பதவி ஒன்றும் எனக்கு பெரிதல்ல
தற்போது கூடியுள்ள பாராளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கான நேரத்தின்போது பாராளுமன்றில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நாட்டை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி எமக்கு பதவியை கொடுக்கும் போது இந் நாட்டை பாதுகாக்கும் நோக்கில் இந் நாட்டை நாங்கள் பாரம் கொடுக்கும் போது இருந்த நிலையை மீண்டும் கொண்டு வருவதற்காக அதை பொறுப்பேடுக்க வேண்டிய கடமை எமக்குள்ளது.
நாட்டை பொருளாதாரத்திலும் அனைத்து விதத்திலும் நாட்டை பாதுகாக்கவே பொறுப்பை ஏற்றக்கொண்டோம்.”என தெரிவித்தார்.