• Sat. Oct 11th, 2025

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்

Byadmin

Jan 1, 2019

(முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மீண்டும் விளக்கமறியலில்)

முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனை எதிர்வரும் 08ம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே இன்று(01) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீதிமன்றில் தெரிவித்தனர்.

2012ம் ஆண்டு வெலிக்கட சிறைச்சாலையில் 27 சிறைக் கைதிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *