பாதுகாப்பற்ற இடங்களில் செல்ஃபி புகைப்படங்களை எடுக்க முயற்சித்த 19 பேர் இந்த வருடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த வருடத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டு வருடங்களிலும் உயிரிழந்தவர்களில் 90 வீதமானவர்கள் இளம் வயதினர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால், பாதுகாப்பற்ற தொடரூந்து பாதை, வீதிகளுக்கு அருகில் செல்ஃபி புகைப்படம் பிடிப்பதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
மேலும், கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் அண்மையில், தொடரூந்து பாதைக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயற்சித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுவனும் அவரது சகோதரரான 26 வயதான இளைஞரும் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.