(ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் குறித்து பரிந்துரை செய்ய விசேட குழு)
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேவால் எதிர்வரும் 07ம் திகதி குழுவொன்று நியமிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மீளக் கட்டியெழுப்புவது சம்பந்தமாக கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைப்பதற்காகவே குறித்த குழு அமைக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.