• Sun. Oct 12th, 2025

ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது

Byadmin

Jan 11, 2019

(ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைத்தது)

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதாக நிதியமைச்சு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை குறைப்பதாக தெரிவித்துள்ளது.

அதன்படி 92 மற்றும் 95 ஒக்டைன் பெற்றோல் வகைகள் 2 ரூபாவால் குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஓட்டோ டீசலின் விலை 2 ரூபாவினாலும் சுப்பர் டீசல் 3 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளதாக ஐஓசி தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *