எனினும், உணவு தேடிக்கொண்டு தன்னுடைய இரண்டு குட்டிகளுடன் வந்த அப்பெண் கரடி, அந்த நால்வரையும் கண்டுவிட்டது. அச்சமடைந்த அந்த நால்வரும் சத்தமிட்டு, கரடியையும் அதன் குட்டிகளையும் விரட்டுவதற்கு முயன்றுள்ளனர். எனினும் பயமின்றி வந்த அந்தப் பெண் கரடி, அந்த இளைஞன் மீது பாய்ந்துள்ளது. அந்த இளைஞனும், பெண் கரடியை ஓங்கி எத்தியுள்ளான். அப்போது தூக்கியெறியப்பட்ட கரடி, மிக உயரத்துக்குச் சென்று கீழே விழுந்துள்ளது என்றும் அதன் பின்னரே, அவ்விளைஞனை கரடி சரமாரியாகத் தாக்கியதாக கரடியிடமிருந்து தப்பிய இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.
கரடிக்கும் மேற்படி இளைஞனுக்கும் இடையில் நேருக்குநேர் மோதல் இடம்பெற்றபோது, தாங்கள் ஒளிந்திருந்து பார்த்ததாகவும் அப்போது, குட்டிக்கரடிகள் இரண்டு மரத்தின் மீதேறி பார்த்துக்கொண்டிருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இரத்தவெள்ளத்தில் இளைஞன் மயங்கி விழுந்ததையடுத்து, தன்னுடைய குட்டிகளுடன், அக்கரடி காட்டுக்குள் சென்றதையடுத்தே, நண்பனை காப்பற்றி வைத்தியசாலையில் சேர்த்ததாக, அந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.