• Sat. Oct 11th, 2025

பால்மாவுக்கும் விலைச் சூத்திரத்தினை அறிமுகப்படுத்த தீர்மானம்…

Byadmin

Jan 24, 2019

(பால்மாவுக்கும் விலைச் சூத்திரத்தினை அறிமுகப்படுத்த தீர்மானம்…)

இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவுக்காக விலைச் சூத்திரம் ஒன்றை எதிர்வரும் 02 வாரங்களில் அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இறக்குமதி பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் சில அண்மையில் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், பால்மா இறக்குமதி நிறுவன பிரதிநிதிகள், நிதியமைச்சின் அதிகாரிகள், வணிக மற்றும் கைத்தொழில் அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பிரதிநிதிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன்போது எரிபொருளுக்கு போன்றே பால்மாவிற்கும் விலைச் சூத்திரம் ஒன்றை எதிர்வரும் இரண்டு வாரங்களில் அறிமுகப்படுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் பால்மாவுக்கு காணப்படுகின்ற விலைக்கு அமைவாக நாட்டிலும் பால்மாவின் விலை மாற்றமடையும் வகையில் குறித்த விலைச்சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *