(இன்று வருகிறது விலை சூத்திரம்..)
நேற்று ஞாயிரு விடுமுறை என்பதால் வழமையாக எரிபொருள் மீள் பரிசீலனை செய்யப்படும்10 திகதியான நேற்று எரிபொருள் மீள் பரிசீலனை செய்யப்படவில்லை என நிதி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் இன்று கூடும் விலை நிர்ணய குழு விலை சூத்திரம் மூலம் இன்று மீண்டும் எரிபொருள் விலையை மீள் பரிசீலனை செய்யவுள்ளது.
கடந்த மாதம் பத்தாம் திகதி எரிபொருள் பெரல் ஒன்றின் விலை 59 ஆக இருந்த அதேவேளை இன்று அது 64 ஆக காணப்படுகிறது.
உலக சந்தையில் 5 டொலர் விலை அதிகரித்துள்ள நிலையில் இன்று விலை சூத்திரம் அமுல் படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.