(அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த ஈரான்)
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முடிவால் உலகளாவிய அளவில் ஈரான் நாட்டின் மீதான நன்மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் ஹஸன் ரவுகானி தெரிவித்தார்.
அமைதியான முறையில் ஆக்கப்பூர்வமான தேவைகளுக்கு யூரேனியத்தை செறிவூட்டும் உரிமை ஈரானுக்கு உள்ளதாகவும் தெரிவித்த ரவுகானி, அமெரிக்காவின் அழுத்தத்துக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்று கூறியிருந்தார்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஈரானின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
ஆனால், இந்த நடவடிக்கைக்கு சற்றும் அஞ்சாத ஈரான் அரசு, பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு பகுதியில் செயல்படும் அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. #IranianMilitaryForce #IRG #Trump