(மதுஷ் குறித்த தீர்மானம் இன்று)
டுபாயில் வைத்து அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மாகந்துர மதுஷை, இலங்கைக்கு நாடு கடத்துவதா இல்லையா என்பது குறித்து, அந்நாட்டு நீதிமன்றம் இன்று (02) தீர்ப்பளிக்கவுள்ளது.
மதுஷ் கடந்த பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி, டுபாயில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின்போது, அவர் உட்பட இலங்கையர்கள் 31 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே, அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.