• Sat. Oct 11th, 2025

அசாத் சாலிக்கு எதிராக முறைப்பாடு

Byadmin

Jun 30, 2017

மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலியின் செயற்பாடுகள் தொடர்பில், கொழும்பு – கோட்டை குற்ற விசாரணைத் திணைக்களத்திடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

பிவித்துரு ஹெல உறுமயவின் இளைஞர் விவகார செயலாளர் சுகீஸ்வர பண்டார, கலாச்சார விவகார செயலாளர் உபுல் கோணார மற்றும் சட்டச் செயலாளர் ரோஹன தல்பாவில ஆகியோர் நேற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் படி, தண்டணைக்குரிய குற்றத்தை அசாத் சாலி இழைத்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 27ம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, பௌத்த பிக்குகள் முஸ்லிம் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார் எனவும், எனினும் அவ்வாறானதொரு முறைப்பாடு இதுவரை பொலிஸில் முன்வைக்கப்படவில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்தநிலையில், அசாத் சாலியால் கூறப்பட்ட இந்த பொறுப்பற்ற கருத்து ஆகமங்களுக்கு இடையில் குழப்பநிலையை தோற்றுவிப்பதை நோக்காகக் கொண்டது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *