• Sat. Oct 11th, 2025

வரலாற்றில் இன்று… (ஜூன் – 30)

Byadmin

Jun 30, 2017

1737 : ரஷ்­யாவின் படைகள் மார்ஷல் மியூனிச் தலை­மையில் துருக்­கியப் படை­களைத் தாக்கி 4,000 துருக்­கி­யர்­களைச் சிறைப்­பி­டித்­தனர்.

1882 : அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜேம்ஸ் கார்­பீல்ட்டை சுட்டுக் கொன்ற “சார்ல்ஸ் கைட்டோ” தூக்­கி­லி­டப்­பட்டான்.

1886 : கன­டா­வுக்கு குறுக்­கான முதல் ரயில் பயணம் மொன்ட்­ரீயல் நகரில் ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஜூலை 4 ஆம் திகதி  போர்ட் மூடி நகரை அந்த ரயில் சென்­ற­டைந்­தது.

1905 : சிறப்புச் சார்புக் கோட்­பாட்டை அறி­மு­கப்­ப­டுத்தும் ஐன்ஸ்­டீனின் இயங்கும் பொருட்­களின் மின்­னி­யக்­க­வியல் ஆய்வுக் கட்­டுரை வெளி­வந்­தது.

1910 : இலங்­கையில் ஐந்து சத செப்பு நாணயம் பாவ­னையில் இருந்து விலக்­கப்­பட்­டது.

1912 : கன­டாவில் ரெஜினா என்ற இடத்தில் சூறா­வளி தாக்­கி­யதில் 28 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1917 : முதல் உலகப் போரில்  அச்சு நாடு­க­ளுக்கு எதி­ராக கிரேக்கம் போர்ப் பிர­க­டனம் செய்­தது.

1934 : ஹிட்­லரின் அர­சியல் எதி­ரி­க­ளுக்கு எதி­ரான வன்­முறை “நீள் கத்­தி­க­ளு­டைய இரவு” ஜேர்­ம­னியில் நிகழ்ந்­தது.

1937 : உலகின் முத­லா­வது அவ­சரத் தொலை­பேசி எண் (999) லண்­டனில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

1941 : இரண்டாம் உலகப் போரில் நாஸி ஜேர்­ம­னி­யினர் யுக்­ரைனின் லுவோவ் நகரைக் கைப்­பற்­றினர்.

1944 : இரண்டாம் உலகப் போரில் செர்போர்க் சண்டை முக்­கிய துறை­முகம் அமெ­ரிக்கப் படை­க­ளிடம் வீழ்ந்­ததை அடுத்து முடி­வ­டைந்­தது.

1956 : அமெ­ரிக்­காவின் இரண்டு விமா­னங்கள் அரி­சோனா மாநி­லத்தில் மோதிக் கொண்­டதில் 128 பேர் கொல்­லப்­பட்­டனர்.

1960 : பெல்­ஜி­யத்­திடம் இருந்து கொங்கோ  சுதந்­திரம் பெற்­றது.

1971 : சோவி­யத்தின் சோயுஸ் 11 விண்­க­லத்தில் ஏற்­பட்ட காற்றுக் கசி­வினால் விண்­வெளி வீரர்கள் மூவர் கொல்­லப்­பட்­டனர்.

1972 : ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட சர்­வ­தேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதி­க­ரிக்­கப்­பட்­டது.

1985 : லெபனான் தலை­நகர் பெய்­ரூத்தில் 17 நாட்­க­ளாகக் கடத்­தப்­பட்­டி­ருந்த 39 அமெ­ரிக்க விமானப் பய­ணிகள் விடு­விக்­கப்­பட்­டனர்.

1990 : கிழக்கு மற்றும் மேற்கு ஜேர்­ம­னிகள் தமது பொரு­ளா­தா­ரத்தை ஒருங்­கி­ணைத்­தன.

1997 : முத­லா­வது ஹரி பொட்டர் நூல் வெளி­யி­டப்­பட்­டது.

1997 : ஹொங்ெ­காங்கின் அதி­கா­ரத்தை சீனா­விடம் பிரிட்டன் ஒப்­ப­டைத்­தது.

2002 : உலகக் கிண்ண கால்­பந்­தாட்­டத்தில் 5 ஆவது தட­வை­யாக பிரேஸில் சம்­பி­ய­னா­கி­யது.

2013 : அமெ­ரிக்­காவின் அரி­ஸோனா மாநி­லத்தில் காட்டுத் தீயை அணைக்கப் போரா­டிய 19 தீய­ணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.

2015 : இந்தோனேஷியாவில் இராணுவ விமானமொன்று சுமத்ரா பிராந்தியத்தின் குடியிருப்புப் பகுதியொன்றில் வீழ்ந்ததால் தரையிலிருந்த 22 பேர் உட்பட 143 பேர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *