(தேர்தலுக்கு 45 மில்லியன் டொலர்களைக் கோரும் தேர்தல்கள் செயலகம்)
ஜனாதிபதித் தேர்தலுக்காக அரச திறைசேரியில் இருந்து சுமார் 45 மில்லியன் டொலர்களைக் தேர்தல்கள் செயலகம் கோரியுள்ளதாக அச்செயலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்த அவர் , இந்த நிதி அச்சிடுதல், பாதுகாப்பு ஏற்பாடுகள், மின்சாரம் மற்றும் அஞ்சல் சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.
அதன்படி, இந்த கோரிக்கைக்கு அரச திறைசேரி அடுத்த வாரம் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.