• Sun. Oct 12th, 2025

போர்ச்சுக்கல் நாட்டின் சிறந்த வீரருக்கான விருதை 10-வது முறையாக வென்றார் ரொனால்டோ

Byadmin

Sep 4, 2019

(போர்ச்சுக்கல் நாட்டின் சிறந்த வீரருக்கான விருதை 10-வது முறையாக வென்றார் ரொனால்டோ)

போர்ச்சுக்கல் நாட்டில் ஆண்டுதோறும் சிறந்த கால்பந்து வீரர்களுக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வருடத்திற்கான விருதை பெற கிறிஸ்டியானோ ரொனால்டோ (யுவான்டஸ்), ஜொயாவோ பெலிக்ஸ் (அட்லெடிகோ மாட்ரிட்), பெர்னார்டோ சில்வா (மான்செஸ்டர் சிட்டி), புருனோ பெர்னாண்டஸ் (ஸ்போர்ட்டிங் லிஸ்பன்) ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது.

இறுதியில் ரொனால்டோ விருதை தட்டிச் சென்றார். ரொனால்டோ இந்த விருதை 10-வது முறையாக வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சிறந்த ஆட்டத்தால் யுவான்டஸ் 8-வது முறையாக ‘செரி ஏ’ கோப்பையை கைப்பற்றியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *