• Sun. Oct 12th, 2025

“சுதந்திர கட்சியின் ஆதரவு கிடைக்கும்” – மஹிந்த ராஜபக்ஸ

Byadmin

Oct 6, 2019

(“சுதந்திர கட்சியின் ஆதரவு கிடைக்கும்” – மஹிந்த ராஜபக்ஸ)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சின்னத்தை மாற்றுவதில் சட்டப் பிரச்சினை காணப்படுவதனை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ இன்று (06) தெரிவித்துள்ளார்.

தற்பொழுது கோட்டாபய ராஜபக்ஸவுக்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாமரை மலர் மொட்டு சின்னத்தின் கீழ் கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில், அதனை மாற்றம் செய்வதற்கு நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடைக்கும் என தான் எதிர்பார்ப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஸவின் வேட்புமனு ஒப்பமிடும் இன்றைய நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் எதிர்க் கட்சித் தலைவர் இதனைக் கூறியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *