• Sun. Oct 12th, 2025

பாகிஸ்தானை அதன் மண்ணில் வெள்ளையடிப்புச்செய்து, வரலாற்றுச்சாதனை படைத்த இலங்கை

Byadmin

Oct 10, 2019

(பாகிஸ்தானை அதன் மண்ணில் வெள்ளையடிப்புச்செய்து, வரலாற்றுச்சாதனை படைத்த இலங்கை)

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இன்று (09) இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் இலங்கை அணி வெற்றிப் பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 
இலங்கை அணி சார்பில் ஓசத பெர்ணான்டோ ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களைப் அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார். 
பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் அமீர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 
பதிலுக்கு 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. 
பாகிஸ்தான் அணி சார்பில் ஹரிஸ் சொய்ல் 52 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுக் கொண்டார். 
பந்து வீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 
அதன்படி, மூன்றாவது ரி 20 போட்டியில் இலங்கை அணி 13 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. 
தொடரின் மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்று இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வௌ்ளையடிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *