(“அனைத்தின மக்களையும் நிம்மதியாக பாதுகாப்புடன் வாழவைப்பதே எனது நோக்கம்” – கோட்டாபய)
பேருவளையில் இன்று நடந்த கூட்டத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச உரை நிகழ்த்தினார். “நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு மக்கள் என்னை கேட்கின்றனர். நான் செல்லும் இடமெல்லாம் மக்களிடம் பேசுகிறேன். எதையும் செய்ய முன்னர் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறு மக்கள் என்னிடம் கேட்கின்றனர்.நான் அதனை செய்வேன். அனைத்து இன மக்களையும் நிம்மதியாக பாதுகாப்புடன் வாழவைப்பதே எனது நோக்கம்.. என தனதுரையில் தெரிவித்தார்.