• Sun. Oct 12th, 2025

பாகிஸ்தானில் ஆற்றில் வேன் கவிழ்ந்து 17 பேர் உயிரிழப்பு

Byadmin

Jun 10, 2021

பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சிலாஸ் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பஞ்சாப் மாகாணம் ராவல்பிண்டி நகருக்கு சுற்றுலா செல்வதற்காக வேன் ஒன்றை வாடகைக்கு அமர்த்தினர். இதையடுத்து பெண்கள், சிறுவர்கள் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் நேற்று காலை வேனில் சுற்றுலா புறப்பட்டனர்.
இந்த வேன் கைபர் பக்துங்வா மாகாணத்தில் உள்ள பனிபா நகரில் மலைப்பாங்கான சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தது.‌ அப்போது அங்குள்ள ஒரு குறுகலான வளைவில் திரும்பியபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் உள்ள இந்துஸ் ஆற்றில் கவிழ்ந்தது. ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் ஓடுவதால், சில நொடிகளில் வேன் முற்றிலுமாக நீரில் மூழ்கியது. இந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் மற்றும் வேன் டிரைவர் என 17 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *